நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது, “ராகுல் காந்தி முதலில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றட்டும், அதன் பின்னர் அவர் அக்னிபாத் திட்டம் குறித்து பேசட்டும்” என தெரிவித்துள்ளார்.