வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையிலான “இந்தியா கூட்டணி” சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தோழர். துரை வைகோ,மமக திருச்சி மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.அப்போது
மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC அவரை வரவேற்றார்
மமக நிர்வாகிகளிடம் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் அவர் கூறியதாவது,
8
வேட்பாளர் தோழர். துரை வைகோ நமது திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மனிதநேய மிக்க சிறந்த நட்சத்திர வேட்பாளர் நமது கூட்டணியின் சார்பில் இங்கு போட்டியிடுகிறார் அவரின் வெற்றிக்கு சிறப்பான வகையில் களப்பணியாற்ற மமக தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லா MLA, அவர்களின் உத்தரவு வின் போரில் மனிதநேய மக்கள் கட்சி தயராக இருப்பதை தெரிவித்து அவரது வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவித்தார்.
அடுத்த பேசிய வேட்பாளர் தோழர். துரை வைகோ தான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக செயல்படுவதாகவும், என்னை இங்கு வெற்றி பெற செய்தால் இஸ்லாமிய சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பெரும் பணியினை மேற்கொள்வேன் என்றும், என்னை அனைவரும் தோழர் என்றே அழைக்கவும் என நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
இந் நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், நஜீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மதிமுக மாநில துணை பொது செயலாளர் Dr. ரொக்கையா, மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், மமக மாவட்ட துணை செயலாளர்கள் அசாருதீன் உள்ளிட்ட மமக துணை நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.