அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு.
நாளை 17.09.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில்
திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு சார்பில்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதுசமயம்
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோன் என சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் …