உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் திருடன் ஒருவன் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிவிட்ட கதை வைரலாகி வருகிறது. லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே ஒரு வேலையாக வெளியில் சென்று இருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு போன் செய்தனர்.
போலீசார் உடன் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஏசியை போட்டுவிட்டு தலையணை போட்டு திருடன் ஒருவன் வசதியாக தூங்கிக் கொண்டிருந்தான். இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து அவனை எழுப்பி விசாரணை நடத்தினர். அவன் போதையில் இருந்ததால் அவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருடன் இது குறித்து போதை தலைக்கேறியதால் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு பிறகு திருடிச் செல்லலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.