Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

விளையாடி கொண்டிருந்த கால்பந்து வீரர் சுருண்டு விழுந்து மரணம்…!

0

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் சுப்ரமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பத்திரம் எழுதும் வேலை செய்து வரும் சுப்ரமணி, தினமும் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மைதானத்திற்கு சென்ற அவர் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுயநினைவின்றி இருந்த சுப்ரமணியை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்ரமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்