திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.
சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தை காப்பதற்காகவே பச்சை பட்டினி விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும் என்பது நிதர்சனம்..