Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

சோகத்துடன் வெளியேறியது ஆர்சிபி அணி

0

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இடம் பிடித்தது. இதில், நேற்று (மே 22) அகமதாபாத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இதனால் ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்