புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி….!
அன்பு, அறிவு, கருணை, நல்லொழுக்கம், நேர்மை ஆகிய கொள்கைகளை புத்தர் போதித்தார். இந்த கொள்கையின் அடிப்படையில் இயங்கும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை 13 வருடங்களாக பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மாபெரும் மருத்துவ முகாம் நிகழ்ச்சியை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் கோவிந்தராஜ், சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் ஆகியோர் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்ட கலந்து கொண்டு பயன்பெற்றனர். பின்னர் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா, நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி, அளுந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எமல்டா லில்லி கிரேசி, மாவட்ட பிரதிநிதி சந்தியாகு, முன்னாள் தலைவர் அற்புதராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இருதயராஜ், தங்கவேல், பிரின்ஸ் ஹோட்டல் ரமேஷ் தமிழ்நாடு பௌத்த சங்க பொது செயலாளர் போதி அம்பேத்கர், புனித ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குனர் சார்லஸ், இமாம் அகமது இஸ்மாயில், வெளிச்சம் செரின் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.