திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன், லிமிடெட் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பின் தேயிலை தோட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விருப்ப ஓய்வுபெறும் தொழிலாளர்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் சட்டப்படி வழங்க வேண்டிய பலன்களுடன், கருணைத்தொகை மற்றும் போனஸ் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தற்போது அமைந்துள்ள எஸ்டேட்களை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து, தேயிலை தோட்டங்களை தொடர வைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.