ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது.
இந்தப்போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பெங்களூர் அணியை பற்றி இப்போது பேசினால், அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.
அது என்னவென்றால், அவர்களுக்கு ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று தான் சொல்வேன். கோப்பையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. சரியாக விளையாடவேண்டும். சென்னை அணியை வென்றால் மட்டும் கோப்பையை வென்றது போல் ஆகிவிடாது. இதனை கண்டிப்பாக பெங்களூர் அணி புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் கோப்பையை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் பிளே ஆஃப் சுற்றில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.
சில முக்கியமான போட்டிகளில் எப்படி விளையாடினாள் வெற்றிபெறமுடியும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு திருத்திக்கொண்டு விளையாடுங்கள்” எனவும் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.