தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து உயர்கல்விக்காக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் இலவசபேருந்துக்கான பாஸ், மிதிவண்டி மற்றும் சீருடை ஆகியவை வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044 2251 0001 என்ற தொலைபேசி எண் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.