திருச்சி தேசியக் கல்லூரியில் இளம் தலை முறை மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டும் நிகழ்வாக வேலைவாய்ப்பு தின விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். துணைமுதல் வர் முனைவர் பிரசன்ன பாலாஜி வாழ்த்துரை வழங்கினார்.
ஜெயராஜ்மோட்டார்ஸ்நிறுவன தலைமைநிர்வாக அலுவலர் அருண் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், எதிர்கால இந்தியாவை கட்ட மைக்கவேண்டியபொறுப்பும் கடமையும் மாணவர்களுக்கே உரியதாகஇருக்கிறதுஎன்றும், நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே வளர்ச்சியை அடைய தூண்டுகோலாக இருக்கும் என்றும் பேசினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்த்திகேயன் 40க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங் கள் வாயிலாக தேசியக் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்ற நிகழ்வினை விரிவாக எடுத்துரைத்தார். எண்ணற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்ற இத்தருணத்தை தேசியக் கல்லூரியின் மாணவர்கள் பேராசிரியர்கள் பெற்றோர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் மனம் நெகிழ்ந்து போற்றினர்