Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் – அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்

0

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்..

முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில். ,

கடந்த 20 ஆண்டுகளாக என்னென்ன திருச்சி மாவட்டத்திற்கு தேவை என்பதை ஆராய்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.

ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறக்கப்படும். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் ஐடி பார்க் அமைக்கப்படும்.   உலக தரம் வாய்ந்த ஒரு கட்டமைப்புடன் பசுமை பூங்கா திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் அமைக்கப்படும். அதிமுக பாஜகவில் இருந்து வெளிவந்ததற்கு சிறுபான்மையினர் வாக்கு காரணம் இல்லை இதை ஒரு காரணமாக கூறி வெளியேறினர். திராவிடம் ஆரியம் என்று தமிழகத்தில் உள்ளது திராவிடர்களான திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் என்ற ஒரு ஆரியர் தான் தேவைப்பட்டார் அவர்களுக்கு தேவையென்றால் வைத்துக் கொள்வார்கள் இல்லை என்றால் விலகி விடுவார்கள் என கூறினார்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்