பாலஸ்தீனம் ரபா அகதிகள் முகாம்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரலே கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டான அருகில் இன்று மாலை 4 மணியளவில் மாவட்ட தலைவர் MA.முகம்மது ராஜா தலைமையில் பாலஸ்தீனம் ரபா அகதிகள் முகாம்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும் உலக நாடுகள் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது,
மாநில IPP துணை செயலாளர் ரபீக் மற்றும் மகளிர் அணி மாநில பொருளாளர் ஷான்ராணி ஆலிமா ஆகியோர்
கண்டன உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது Mc மற்றும் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர்கள் அஷ்ரப் அலி ,முகமது இலியாஸ், மாவட்ட பொருளாளர் காஜாமொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கிளைக் கழகத்தின்
பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் இறுதியாக வர்த்தக சங்கம் மாவட்ட செயலாளர்கள் நன்றியுரை கூறினார்.