Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தரிசு நிலத்தில் கொய்யா சாகுபடி.. அசத்தும் விவசாயிகள்!

0

விழுப்புரம் இரும்பை கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வயல்களை வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் நேற்று (மே 28) ஆய்வு செய்தார். 11 ஏக்கரில் 13 விவசாயிகள் அடங்கிய தரிசு நில தொகுப்பு உருவாக்கி வேளாண் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட்டது.

தற்போது கொய்யா செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து காய்க்க துவங்கி உள்ளது. வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தரிசாக கிடந்த நிலங்களை சாகுபடிக்கு மாற்றி வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

மேலும் ஊடுபயிராக எள், உளுந்து மற்றும் மணிலா பயிர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு கூடுதல் வருமானம் பெற்றோம் என விவசாயி சரஸ்வதி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்