சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் ஜுன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து ஜுன் 7,14,21,28 தேதிகளில் மதியம் 3 மணிக்கு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.