ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் ஆர்சிபி தோல்வி அடைந்து வெளியேறிய போது சென்னையை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடுவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என ஆர்சிபிஐ அம்பத்தி ராயுடு நேரடியாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி சேம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்த அம்பத்தி ராயுடு மீண்டும் ஆர்சிபிஐ மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்கள். நரேன், ரசல், ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் உயர்ந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். இதன் மூலம் தான் நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். இதை நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோம். ஆரஞ்சு தொப்பியை பெற்றால் மட்டும் உங்களால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. மேலும் நிறைய வீரர்கள் இணைந்து 300 ரன்கள் அடிப்பது போன்ற கூட்டணியான செயல்பாடுகள் தான் வெற்றியை பெற்று கொடுக்கும் என்று கூறியுள்ளார்.