இனிய காலை வணக்கம் ஐயா 🙏 திருச்சி 04.09.2024 புதன்கிழமை…
தண்ணீரை எப்போதும் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்,
காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்,
டைபாய்டு காய்ச்சலா, மலேரியா காய்ச்சலா, டெங்கு காய்ச்சலா என்பதை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்,
ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்,
எல்லோர் வீட்டிலும் நிலவேம்பு குடிநீர் சூரணம் இருக்க வேண்டும்
தினசரி தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீர் குடிக்க வேண்டும்
கொசுக்கள் கடிக்காதவாறு தற்காப்பு அவசியம் வேண்டும்
இரவு தூங்கும் போது கை கால் பகுதியில் வேப்ப எண்ணெய், கற்பூராதி எண்ணெய் தடவிக் கொள்ளலாம்
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்க சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் 👍