இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார்.
அவருடைய பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் தேடும் பணி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.