தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேர்வலாறு, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.