சாதி, சமய, இனம், மொழி, சமூக வேறுபாடுகளைக் களையும் வகையில் சீக்கிய குரு குருநானக், சமபந்தி விருந்து நடைமுறையை அறிமுகப்படுத்தினார். சீக்கியர்களின் 3-வது குரு அமர்தாஸ், அனைத்து குருத்வாராக்களிலும் இந்த நடைமுறையை அமல்படுத்தினார்.
இதன்படி சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களில் பொது சமையல் அறை கூடம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். லங்கர்என்றழைக்கப்படும் இந்த கூடத்தில் சைவ உணவு வகைகளை தயாரிக்கவும் பரிமாறவும் தன்னார்வமுள்ள சீக்கிய ஆண், பெண் தொண்டர்கள் முன்வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிஹார் தலைநகர் பாட்னாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்குள்ள குருத்வாராவுக்கு சென்றஅவர் உணவு சமைத்து பக்தர்களுக்கு பரிமாறினார்.