பச்சைபெருமாள்பட்டி கிராமத்தில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து நடைபெற்ற இந்த திண்ணை பிரச்சார கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இளவரசன் அவர்கள் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மத்திய அரசின் விலை வாசி உயர்வு கொள்கையையும் எதிர்த்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ் முன்னாள் சேர்மன் மனோகரன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன். காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.