பூமி உட்பட நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்றுப்பாதை பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதனால் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் சுற்றும் கோள்களை நாம் பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக 3 அல்லது 4 கிரகங்கள் நேர்கோட்டில் காணப்பட வாய்ப்பு உள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, ஜூன் 3 ஆம் தேதி புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காணலாம் என தெரிவித்துள்ளனர்.
இப்படி ஆறு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது அபூர்வமான நிகழ்வாகும். ஆன்மிக ரீதியாக அன்று நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு சக்தி அதிகரிக்கும். அன்றைய தினம், உங்கள் வீட்டின் பூஜையறையில் அமர்ந்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் பிரார்த்தனைச் செய்து வந்தாலே அதிக பலன்கள் உண்டு.
ஜூன் 3ம் தேதி சூரிய உதயத்திற்கு முன் அதிகாலையில் சூரியனின் மேல் பக்கம் வெறும் கண்களால் வானில் நடக்கும் இந்த அபூர்வ காட்சியை பார்க்கலாம். யுரேனஸ், நெப்டியூன், புதன் ஆகிய கிரகங்கள் சற்று தொலைவில் உள்ளதால், வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொலைநோக்கியின் மூலம் தெளிவாகக் காணலாம்.
காற்று மற்றும் ஒளி மாசுபடாத இடம் மற்றும் சற்று உயரமான இடம் அல்லது மலைப்பிரதேசங்களில் அமர்ந்து பார்ப்பது சிறந்தது. இது போன்ற 5 அல்லது 6 கிரகங்களின் அணிவகுப்பை மீண்டும் ஆகஸ்ட் 28ம் தேதியும், பின்னர் 2025ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, பிப்ரவரி 28ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 29ம் தேதிகளில் மீண்டும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.